CHITHIRAI BABY TAMIL | சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் என்னவாகும்?

CHITHIRAI BABY TAMIL | சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் என்னவாகும்?

CHITHIRAI BABY TAMIL:

பொதுவாக, ‘சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது’ என்று பலரும் சொல்வார்கள். ஆனால், அதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? என்பதை காண்போம்.

CHITHIRAI BABY TAMIL

சித்திரை மாதம் குழந்தை பெற்றால் சீரழியும் என்று ஆடி மாதத்திலேயே தம்பதிகளை பிரித்து வைப்பார்கள். ஆனால் சித்திரை மாதம் பிறந்த மக்கள் சீரோடும், சிறப்போடும் வாழ்ந்துள்ளதற்கு பல உதாரணங்கள் உள்ளன. தெய்வீக அவதாரங்கள் பல சித்திரை மாதத்திலேயே நிகழ்ந்துள்ளன.

CHITHIRAI BABY TAMIL:

ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு பழமொழியைச் சொல்லி பயமுறுத்தும் சம்பிரதாயம் நம் நாட்டில் உண்டு. ஆனால், அந்தப் பழமொழிகளின் கருத்துக்கு ஆதாரம் கிடையாது. சித்திரை நட்சத்திரம் குறித்தும், ‘சித்திரை அப்பன் தெருவிலே’ எனும் பழமொழி உண்டு. இதனால் பயந்து, தகப்பனைக் காப்பாற்ற சித்திரையில் பிறக்கும் பிள்ளையை தத்துக் கொடுக்கும் பழக்கமும் தமிழகத்தில் குறிப்பிட்ட சமூகத்தவரில் காணப்படுகிறது.

சித்திரை மாதத்தில் பல கோயில்களிலும் சித்திரை திருவிழா நடக்கும். அதனை முன்னிட்டு சித்திரை ஒன்றாம் தேதி அனேக சிவாலயங்களில் ரதோர்சவம் நடப்பதுண்டு. இன்று அவினாசி, திருமருகல், காஞ்சி குமரக்கோட்டம், திருச்சி வெக்காளியம்மன் மற்றும் திருப்பைஞ்சிலி, திருவாரூர் வீரராகவர் கோயில் ஆகிய திருத்தலங்களில் ரதோர்சவம் நடப்பது குறிப்பிடத்தக்கது.

CHITHIRAI BABY TAMIL:

அந்த காலங்களில் வயதானவர்கள், உடம்பு சரியில்லாதவர்கள் மற்றும் வேறு ஏதேனும் காரணங்களுக்காக கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் ஆகியவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இறையருள் கிடைக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் சித்திரையில் கோயில் திருவிழாக்கள் நடைபெற்றன. அப்போது அம்மையப்பனான சிவ பெருமான் வீதிகளில் காட்சியளித்துக்கொண்டு வீதியுலா வருவார். அதுவே நாளைடைவில் சில விஷமிகளால் ” சித்திரை அப்பன் தெருவிலே” என தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது என்பது வருத்தத்தையளிக்கும் விஷயமாகும்.

சித்திரை மாதம் என்பது அனல் தகிக்கும் வெப்ப மாதம். சாதாரணமாக, மனிதர்களால் இந்த சித்திரை மாத வெயிலை தாங்கவே முடியாது. அப்படி இருக்கும் போது ஒரு கர்ப்பிணிப் பெண்ணால் வயிற்றில் குழந்தை வைத்துக் கொண்டு அதீத வெப்பத்தை தாங்கவே முடியாது. அதேபோல, பிறக்கும் பிஞ்சுக் குழந்தைக்கும் இந்த அதீத வெப்பம் துன்பத்தையே கொடுக்கும். மேலும், இந்த மாதத்தில்தான் அம்மை போன்ற நோய்கள் தாக்கக்கூடும். அதனால்தான் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாது என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

CHITHIRAI BABY TAMIL:

ஆடி மாதத்தில் தம்பதிகள் ஒன்று சேர்ந்தால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் கோடை வெயில் சுட்டெரிக்கும் காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அவதிப்படும் என்றும், குழந்தைகளைக் காப்பாற்ற தந்தைமார்கள் தெருத் தெருவாக அலைய வேண்டிருக்கும் என்பதையும் சித்திரை நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால், அப்பன் ஓட்டாண்டியாகி தெருவில் நிற்பான் என்று மாற்றி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சித்திரை நட்சத்திரத்தை நட்சத்திர சிந்தாமணி ஒற்றை நட்சத்திரம் என குறிப்பிடுகிறது. ஒரு வட்டத்தின் நடுப்புள்ளி போன்று தோற்றம் அளிப்பது. வெண்மையான வண்ணத்துடன் மிக அழகாகத் தோற்றம் அளிப்பதால், ‘சௌம்ய தாரா’ என்று இந்த நட்சத்திரம் அழைக்கப்படுகிறது. எல்லா சுப காரியங்களுக்கும் உகந்த நட்சத்திரம் இது.

ஆனால், ஆன்மிகத்தின்படி ஒரு குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்தால் அது எல்லா விதத்திலும் சிறப்பாகவே இருக்கும். ஏனென்றால், இந்த மாதத்தில்தான் சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சத்தில் பிரவேசம் செய்கிறார். இந்த சமயத்தில் பிறக்கும் குழந்தை எல்லா விதத்திலும் உச்சத்தில் இருக்கும். செல்வாக்கு, அதிர்ஷ்டம் கல்வி, செல்வம், வீரம் ஆகிய அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். அது பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி. இதற்கு என்ன சான்று?

CHITHIRAI BABY TAMIL:

இதிகாச நாயகனான ஸ்ரீராமன், தனது தம்பிகள் லட்சுமணன், பரதன், சத்ருக்னன் நால்வருடன் சித்திரை மாதம்தான் பிறந்தார்கள். அவர்கள் கல்வி, செல்வம், வீரம், அழகு, ஆற்றல், அறிவு என எல்லாவற்றிலும் சிறந்து விளங்கினார்கள். அதுபோல
ஸ்ரீ ராமானுஜரும் சித்திரையில்தான் பிறந்தார்.

மேலும், சித்திரையில் பிறக்கும் ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, நியாயம், தர்மம் எதுவாக இருந்தாலும் இதுதான் சரி, இதுதான் தவறு என்று நேரிடையாக சொல்லும் ஆற்றல் உடையவர்களாக இருப்பார்கள். அதனால் பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கக்கூடாது என்று நினைத்தனர். ஏனென்றால், அந்தக் காலத்தில் பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன. அதனால் சித்திரையில் பிறந்த பெண்ணை திருமணம் செய்ய முன் வரமாட்டார்கள். அவள் உண்மையை உரக்கச் சொல்லும் ஆற்றல் உடையவளாக இருப்பாள். அது புகுந்த வீட்டிற்கு ஏற்புடையதாக இருக்காது என்று நினைத்தார்கள். எனவே, சித்திரையில் குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது என்னும் கூற்று உண்மை அல்ல.

Share the knowledge